செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி அனுமந்தபுத்தேரி, நகர்புற அரசு அரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், கலெக்டரின் மனைவி தடுப்பூசி செலுத்திக் கொண்டார். செங்கல்பட்டு நகராட்சி அனுமந்தபுத்தேரி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகம் நேற்று நடந்தது. இதில் கலெக்டரின் மனைவி டாக்டர் ரேஷ்மா ராகுல்நாத் கலந்து கொண்டு, கொேரானா தடுப்பூசி செலுத்தி கொண்டார். பின்னர், கொரோனா தடுப்பூசி அவசியம் குறித்து காப்பிணிகள் மற்றும் பாலுட்டும். தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், கலெக்டர் ராகுல்நாத் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா சிறப்பு மருத்துவ தடுப்பூசி முகாம் நடக்கிறது.