பட்டிவீரன்பட்டி:பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களங்கொம்பு, தடியன்குடிசை பெரியூர், சேம்பிலியூத்து, பள்ளத்துக்கால்வாய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து விவசாய பகுதிகளை நாசம் செய்து வருகின்றது. குறிப்பாக மலைப்பயிர்களான வாழை, ஆரஞ்சு மற்றும் சவ்சவ், பீன்ஸ் போன்ற காய்கறிகளை கபளீகரம் செய்து விடுகின்றது. காட்டு விலங்குகள் விளைநிலங்களுக்குள் வராமல் இருக்க சோலார் வேலி, முள்வேலியை மலைத்தோட்ட விவசாயிகள் அமைத்துள்ளனர்.