தமிழகம் பழநி அருகே வினோத நோயால் சிறுவன் பரிதவிப்பு: உதவிக்கரம் நீட்ட பெற்றோர் கோரிக்கை Jul 25, 2021 பழநி: பழநி அருகே வினோத நோயால் அவதிப்படும் 13 வயது சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே மானூரைச் சேர்ந்தவர் காட்டப்பன். பிட்டர் தொழிலாளி. மனைவி செல்வி. மகன் காவியபாலன் (13). சிறுவன் காவியபாலன் பிறந்தது முதலே வினோதமான நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். உடல் முழுவதும் தீக்காயம் பட்டதுபோல் இருப்பதால், இதர குழந்தைகளிடமிருந்து பிரிந்து தனித்து வாழும் நிலைக்கு ஆளாகி உள்ளார். இதுகுறித்து காவியபாலனின் தந்தை காட்டப்பன் கூறியதாவது: மனித உடம்பில் தோல்கள் பல அடுக்குகளால் அமைந்திருக்கும். எனது மகனுக்கு ஒரு அடுக்கு தோல் மட்டுமே உள்ளது. சிகிச்சைக்காக பல இடங்களுக்கு அலைந்து விட்டோம். லட்சக்கணக்கில் செலவழித்து விட்டோம். எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது எனது மகன் 8ம் வகுப்பு படிக்கிறான். வினோத நோயால் உடன் படிக்கும் சிறுவர்கள் இவனை ஒதுக்குகின்றனர். இவனை கவனிப்பதற்காகவே வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே மளிகை பொருட்களை வாங்கி, வியாபாரம் செய்து வருகிறோம். கிடைக்கும் வருவாய் உணவிற்கே பற்றாக்குறையாக உள்ளது. இதனால் சிகிச்சையை தொடர முடியவில்லை. ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வலர்கள் எனது மகனுக்கு சிகிச்சை அளிக்க உதவி புரிய வேண்டும். நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். மனைவி செல்வி பிஏ படித்துள்ளார். இருவரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உதவிக்கு : 97865 92966 (காட்டப்பன்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுபட இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்: அமைச்சர் ரகுபதி பேச்சு
கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே ரூ65.09 கோடியில் 4 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்:35 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்
கோடையில் மான்கள் தாகம் தீர்க்க வனப்பகுதியில் கூடுதல் குடிநீர் தொட்டிகள்: அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கடல் சீற்றத்தால் திசைமாறும் நீரோட்டம்; பாம்பன் புதிய ரயில் பாலப்பணிகள் ‘டல்’: தூக்குப்பாலத்தை நகர்த்துவதில் சிக்கல்
கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு வரவேற்க பிரையன்ட் பூங்காவில் 20 ஆயிரம் பூந்தொட்டி: தயார் செய்யும் பணிகள் தீவிரம்
கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பிரதமர் அடிக்கல் நாட்டியும் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பால பணிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்: தொழிலாளர் நலத்துறை உத்தரவு