அலங்காநல்லூர்: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடி பெருந்திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவர். ஆனால், கொரோனா ஊரடங்கால் நேற்று நடைபெற வேண்டிய திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோயில் கோட்டைவாசல் முன்பாக உள்ள மதுரை, மேலூர் சாலைகளின் இருபுறமும் கிடாய் வெட்டி, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து கள்ளழகர் கோயியில், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலில் நெய் விளக்கேற்றினர். மேலும், சோலைமலை முருகன் கோயிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மதியம் 2 மணிக்கு மேல் கோயில் நிர்வாகம் அறிவித்தபடி கோட்டை வாசல் மூடப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.