சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,000-ஐ தாண்டியது; தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 8,449 பேர் பாதிப்பு: 33 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 8,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 71ஆயிரத்து 384 (9,71,384) ஆக  உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா  பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை  வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 8,419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்  மூலம் மொத்த பாதிப்பு 9,71,384 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 4,920 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம்  மொத்தம் 8,96,759 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த  பலி எண்ணிக்கை 13,032 ஆக உயர்ந்துள்ளது.

* அரசு மருத்துவமனையில் 15; தனியார் மருத்துவமனையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 2,636 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் மொத்தம் 2,77,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 2,09,76,696 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று  மட்டும் 97,201 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 61,593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,86,363 பேர் ஆண்கள்,  இன்றைக்கு மட்டும் 5,116 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,84,985 பேர் பெண்கள்,  இன்றைக்கு மட்டும் 3,333 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 263 மையங்களில் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 194.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 29 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது.

* மேற்கு வங்கம்-13.

* கர்நாடகா-9

* பீகார்-4.

* ஆந்திரா-1.

* மகாராஷ்டிரா-1.

* மத்தியப்பிரதேசம்-1.

* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது.

* UAE -1

Related Stories: