யாராவது ஹீல் பண்றேன்னு வந்தால் செருப்பால் அடி: கெனிஷாவை கடுமையாக தாக்கிய ஆர்த்தி ரவி

சென்னை: மனைவி ஆர்த்தியை பிரிந்த பிறகு தெரபிக்காக கெனிஷா பிரான்சிஸை அணுகியதாக தெரிவித்தார் ரவி மோகன். ஹீலிங் செய்த கெனிஷாவை தன் தோழி என்றார் . பின்னர் அவரை கம்பானியன் என பாராட்டினார் ரவி. இந்நிலையில் ஆர்த்தி ரவி, இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு ஹை ஹீல் புகைப்படத்துடன் கூறியிருப்பதாவது, ‘‘எவளாச்சும் உன்ன ஹீல் பண்றேனு வந்தா… ஹீல்ஸாலேயே (ஹீல்ஸ் செருப்பு) அடிச்சு துரத்திவிடு’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆர்த்தி என்னவோ யார் பெயரையும் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால் அதை பார்த்த சினிமா ரசிகர்களோ, ஹீலிங் என்கிற வார்த்தையை பார்த்ததுமே கெனிஷா பிரான்சிஸ் நினைவு தான் வருகிறது. அவர் தானே ஹீல் பண்ணுகிறேன் என ரவி மோகன் வாழ்க்கையில் வந்தார். கெனிஷா செய்ததை மனதில் வைத்தே ஆர்த்தி இப்படி ஒரு மெசேஜ் போட்டிருக்கிறார் என்று பேசுகிறார்கள்.

நேற்றுமுன்தினம் ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் இன்ஸ்டாவில் மூன்று ஸ்டோரிகள் போடவே அது மருமகன் ரவி மோகனுக்கே என்று சினிமா ரசிகர்கள் முடிவே செய்தார்கள். ரசிகர்கள் முடிவு செய்வதுபோல்தான் ஆர்த்தியும் சுஜாதாவும் ரவி மோகனை மறைமுகமாக தாக்கி கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரவி மோகன், ஆர்த்தி வாழ்க்கையில் மூன்றாவது மனுஷி வந்ததால் விவாகரத்து என பேசப்பட்டது. ஆனால் அதை பார்த்த கெனிஷாவோ இந்த விவாகரத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: