- தில்லி
- சென்னை
- கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
- ஜந்தர் மந்தர்
- மத்திய கல்வி அமைச்சர்
- தர்மமேந்திர பிரதான்
- பிரகாஷ் ராஜ்
சென்னை: தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள், பள்ளி பொதுத் தேர்வுகளில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளைத் தொடர்ந்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் போரட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு ஆதரவாக திரையுலகினர் பலர் குரல் கொடுத்து உள்ளனர். அதன் விவரம்:
பிரகாஷ் ராஜ்: அமைதியாகப் போராடிய நாட்டின் இளைஞர்கள் மீது சர்வாதிகார அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறையைக் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இது போன்ற சர்வாதிகாரப் போக்கு நீடிக்காது. நாடு விழித்துக்கொண்டுவிட்டது, இது வெறும் ஆரம்பம் தான். பொய் சொல்லத்தான் பயப்பட வேண்டும். உண்மை பேசுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்? நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் கல்வி முறைகேட்டிற்கு எதிராக அனைவரும் மௌனம் கலைத்துக் குரல் கொடுக்க வேண்டும்.
வரலட்சுமி சரத்குமார்: இது வெறும் அரசியல் சார்ந்த விஷயம் கிடையாது. முற்றிலும் மனிதநேயம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்தது. இளைஞர்களின் கல்வி மற்றும் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்படுவதைத் தடுக்க நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப வேண்டும்.
டொவினோ தாமஸ்: நன்மை, தீமை என்பது மனிதர்களைப் பொறுத்து மாறலாம். ஆனால் அமைதியான ஒரு போராட்டத்தை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட இந்த வழிமுறை நிச்சயம் தவறானது. எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமை என்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் அல்ல, அதுவே அதன் வலுவான அடித்தளம். நாட்டின் எதிர்காலச் சந்ததியினர் தங்கள் உரிமைகளுக்காகப் பேசும்போது, அதனை அடக்குமுறையால் எதிர்கொள்வது நாட்டின் எதிர்காலத்தையே நசுக்குவதற்குச் சமம். மாணவர்கள் எந்த பொதுச்சொத்தையும் அழிக்கவில்லை, வன்முறையில் ஈடுபடவில்லை. அப்படியிருக்கையில் அவர்களுக்கு ஏன் இந்த தண்டனை?
பிரீத்தி ஜிந்தா: நமது கல்வி முறையை உயர்த்தவும் மேம்படுத்தவும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு மாணவருக்கும், சோனமிற்கும் எனது மனமார்ந்த மற்றும் உறுதியான ஆதரவு உண்டு. உங்கள் அனைவருக்கும் மேலும் வலிமை சேரட்டும். ஜெய் ஹிந்த்.
சோனு சூட்: நமது மாணவர்களுக்குத் தடியடி தேவையில்லை, அவர்களை அரவணைக்கும் கரங்களே தேவை.
நடிகை ரேவதி, இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் ரகுமான் உள்பட பலரும் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
