இந்த டிரஸ் வேணாம்: படப்பிடிப்பில் கயாடு லோஹர் அடம்

சென்னை: குறிப்பிட்ட உடையை அணிய மாட்டேன் எனக்கூறி படப்பிடிப்பில் அடம் பிடித்திருக்கிறார் கயாடு லோஹர்.
தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் கயாடு லோஹர், பேட்டி ஒன்றில் தனக்கு உடன்பாடில்லாத ஆடை மற்றும் காட்சிகள் குறித்து உடனடியாக இயக்குநர் மற்றும் படக்குழுவிடம் பேசிவிடுவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘படப்பிடிப்பில் எனக்கு உடன்பாடில்லாத ஆடை அல்லது காட்சிகள் இருந்தால் இயக்குநர், படக்குழுவினரிடம் வெளிப்படையாக பேசிவிடுவேன்.

சமீபத்தில் அதுபோல் ஒரு தெலுங்கு படத்தில் புகார் செய்தேன். ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட எல்லைகள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும். திறந்த உரையாடலே பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான பணி சூழலை உருவாக்கும். எனவே நம்முடைய எல்லைகளில் உறுதியாக இருப்பதும், நம் கவலைகளை தெரிவிப்பதும் மிகவும் முக்கியம்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: