டீயால் பறிபோன பட வாய்ப்பு

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால், கடந்த 2023ல் ஜகத் தேசாயை காதல் திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ‘இலய்’ என்ற மகன் இருக்கிறார். கடைசியாக மலையாளத்தில் ‘ஆடு ஜீவிதம்’, ‘லெவல் கிராஸ்’ ஆகிய படங்களில் நடித்திருந்த அமலா பால், சமீபகாலமாக படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார். இந்நிலையில் இயக்குனர் ஏ.சற்குணம் அளித்துள்ள பேட்டியில், ‘நான் இயக்கிய படங்களின் ஹீரோயின்கள் ஓவியா, இனியா ஆகியோரின் நிஜப்பெயர்களை மாற்றி, நான்தான் அவர்களுக்கு புதுப்பெயர்களை சூட்டினேன்.

எனது ‘வாகை சூட வா’ படத்தில் முதலில் அமலா பால் ஹீரோயினாக ஒப்பந்தமானார். ஹீரோயின் டீ ஆத்துவது போல் ஒரு காட்சி வரும். அதற்காக அமலா பாலை அழைத்து, அந்த காட்சிக்காக ஒத்திகை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அமலா பால், ‘டீ ஆத்துவதற்கு எல்லாம் ரிகர்சலா?’ என்று கேட்டார். ஆனால், ஒத்திகை பார்க்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். கடைசிவரை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், உடனே படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்’ என்றார்.

Related Stories: