நடிகருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் ரகசிய காதலா?

ஐதராபாத்: பாக்யஸ்ரீ போர்ஸ். துல்கர் சல்மான் நடித்த ‘காந்தா’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது ‘தாய் கிழவி’ சிவகுமார் முருகேசன் இயக்கும் ‘சேயோன்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பாக்யஸ்ரீ போர்ஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘அவுரங்காபாத் எனது முதல் வீடு என்றால், ஐதராபாத் எனது 2வது வீடாக மாறிவிட்டது’ என்றார்.

சமீபத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது. அதை உறுதி செய்யும் வகையில் அவர் பேசியிருப்பது, ரசிகர்கள் மத்தியில், ‘யார் அந்த நடிகர்?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இத்தகவலுக்கு பாக்யஸ்ரீ போர்ஸ் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இதனால், இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Related Stories: