ஜி.வி.பிரகாஷை மணலில் புதைத்த இயக்குனர்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் நடிக்கும் புதிய படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் தகவலை படக்குழு அறிவித்துள்ளது. வழக்கமாக இதுபோன்ற அறிவிப்பில் பர்ஸ்ட் லுக் அல்லது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடுவது வழக்கம். தற்போது படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் ஜி.வி.பிரகாஷ் குமார், தெலுங்கு பாடலாசிரியர் அனந்த ராம் ஆகியோரை கழுத்து வரை கடற்கரை மணலில் புதைத்து வைத்து, அருகில் ஹார்மோனிய பெட்டி ஒன்றை வைத்து, ஜி.வி.பிரகாஷ் குமாரின் கைகளை மட்டும் வெளியில் எடுக்க வைத்து, அவரிடம் அனில் ரவிபுடி ஹார்மோனியத்தை கொடுத்து வாசிக்க சொல்வது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி அனில் ரவிபுடி கூறுகையில், ‘ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், இசை அமைப்பாளராகவும் மிகவும் பிசியாக இருக்கிறார். இதனால் பயந்த தயாரிப்பாளர், அவரது கை, கால்களை கட்டி வேலை வாங்க வேண்டும் என்றார். நானும் வித்தியாசமாக யோசித்து விட்டு, இப்படி இருக்கட்டும் என்று ஜி.வியை மணலில் புதைத்து வைத்தேன்’ என்று ஜாலியாக சொன்னார்.

Related Stories: