ருக்மணி வசந்தின் போலி பிகினி படங்களை வெளியிட்ட 2 பேர் சிக்கினர்

சென்னை: சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மதராஸி’, விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’ படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ருக்மணி வசந்த். ‘காந்தாரா சாப்டர் 1’ படம் மூலம் பான் இந்தியா நடிகையாக மாறினார். சமீபத்தில் இவர் பிகினி உடையில் கடற்கரையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ருக்மணியின் எந்த சோஷியல் மீடியா பக்கத்திலும் இந்த புகைப்படங்கள் இடம்பெறவில்லை.

இதனால் இந்த போட்டோக்கள் போலியாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ‘‘இப்புகைப்படங்களை பார்த்து நானும் அதிர்ச்சியடைந்தேன். இது முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. ஏஐ மூலம் நல்ல விஷயங்களை பரப்புங்கள். இதுபோன்ற கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடாதீர்கள்’’ என மோசடி நபர்களை ருக்மணி வசந்த் எச்சரித்தார். அத்துடன் சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்தார்.

இந்நிலையில் நேற்று ஐதராபாத்தை சேர்ந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். இதில் இவர்கள்தான் ருக்மணியின் போலி புகைப்படங்களை வெளியிட்டது என்பது தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: