சென்னை: தென்னிந்திய படவுலகின் முன்னணி நடிகை ருக்மிணி வசந்த், யஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்: எ பைரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’ என்ற பான்வேர்ல்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஜூனியர் என்டிஆருடன் ‘டிராகன்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நீச்சல் உடையில் இருப்பது போல் ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது. இதையறிந்து ஆவேசம் அடைந்த ருக்மிணி வசந்த், நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
எனது போட்டோ என்று சொல்லி, இணையதளங்களில் சில ஏஐ போட்டோக்கள் பரப்பப்படுவதாக அறிந்தேன். இப்படங்கள் முற்றிலும் போலியானவை மற்றும் சித்தரிக்கப்பட்டவை. இந்த போட்டோக்களை உருவாக்குவதும், பரப்புவதும் ஒருவரது தனியுரிமை மீதான கடும் மீறலாகும். இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதுடன், இதை உருவாக்கி பரப்பியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இதுபோன்ற ஏஐ போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாம் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
