மரமல்லியாக மாறிய அதிதி பாலன்

வரும் 15ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் ‘எக்ஸாம்’ என்ற வெப்தொடரை ஏ.சற்குணம் எழுதி இயக்கியுள்ளார். இதில் நடித்துள்ள அதிதி பாலன் கூறுகையில், ‘மரமல்லி என்ற கேரக்டருக்காக என்னை தேர்வு செய்த புஷ்கர், காயத்ரி, சற்குணம் ஆகியோருக்கு நன்றி. இந்த கேரக்டருக்காக உடல்ரீதியாக நான் மாற வேண்டியிருந்தது. சண்டை காட்சிகளுக்காக விசேஷ பயிற்சி பெற்றேன்.

முதல்முறையாக சண்டை காட்சிகளில் நடித்ததால், முன்னெச்சரிக்கை உணர்வுடன் பணியாற்றினேன். எனினும், பலமுறை அடிபட்டது. நானும், துஷாரா விஜயனும் அதிகமாக அடித்துக்கொண்டோம்.‌ எனது கேரக்டர் வில்லத்தனமாக தொடங்கும். இந்த கேரக்டரை பற்றி சற்குணம் என்னிடம் சொன்னபோது, இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு கேரக்டரில் நான் நடித்ததில்லை என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன்’ என்றார்.

Related Stories: