மனிதன் தெய்வமாகலாம் விமர்சனம்…

சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் செல்வராகவனை காப்பாற்ற முயற்சிக்கும் எம்எல்ஏ ஒய்.ஜி.மகேந்திரன், அவரது முன்கதையை கேட்கிறார். பொன்வயல் கிராமத்தில் மனைவி குஷி ரவியுடன் எளிய வாழ்க்கை மேற்கொண்டு வருகிறார், செல்வராகவன். அவரது அக்கா கவுசல்யாவுக்கு அடாவடி ஆசாமி மைம் கோபி வட்டி பணம் கேட்டு குடைச்சல் கொடுக்க, கவுசல்யாவுக்கு உதவ சென்ற குஷி ரவியின் வாழ்க்கையில் மைம் கோபி விளையாட, சாதுவாக இருந்த செல்வராகவன் கையில் கத்தி எடுக்கிறார்.

பிறகு என்ன நடக்கிறது? தூக்கு தண்டனையில் இருந்து செல்வராகவன் தப்பித்தாரா என்பது மீதி கதை. படம் முழுக்க இயல்பாக நடித்திருக்கிறார் செல்வராகவன். யோசித்து, யோசித்து டயலாக் பேசும் அவரது பாணி, திடீரென்று கத்தியை தூக்கும்போது நிமிர வைக்கிறது. அவருக்கும், மனைவி குஷி ரவிக்குமான நேசம் நெகிழ்ச்சி. கன்னட நடிகை குஷி ரவி அழகாக இருக்கிறார், சிறப்பாக நடித்துள்ளார். சிறுமி அமுதாவாக வரும் லிர்த்திகா மற்றும் ஆர்.எஸ்.சதீஷ், கவுசல்யா, மைம் கோபி, சேலம் தீபக், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் நன்கு நடித்துள்ளனர்.

கே.ரவிவர்மாவின் ஒளிப்பதிவும், ஏ.கே.பிரியனின் பின்னணி இசையும் காட்சிகளை நகர்த்த உதவி செய்துள்ளன. ‘சாது மிரண்டா காடு கொள்ளாது’ என்ற பாணியில் திரைக்கதையை உருவாக்கி, கதையில் பழமைத்தன்மையுடன் இயக்கியுள்ள டென்னிஸ் மஞ்சுநாத், பலரை பலி கொடுத்த பிறகு கிராமத்துக்கு சாலை மற்றும் பல்வேறு வசதிகள் வந்ததாக சொல்வது நெருடுகிறது. எம்எல்ஏ மட்டும்தான் அரசாங்கமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

Related Stories: