புலனாய்வு திரில்லர் காணாத சுடர்

சென்னை: தி பாத் மேக்கர்ஸ் சார்பில் வி.அண்ணாமலை, டி. ஆறுமுகம், ஏ. பகவதி தயாரிப்பில், ஜனகன் எழுத்து இயக்கத்தில், முற்றிலும் கல்லூரி நண்பர்கள் இணைந்து பணியாற்றி, மர்மங்கள் நிறைந்த இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘காணாத சுடர்’. வரும் மார்ச் 27ம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் ஜனகன் பேசியதாவது: இது விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் சேர்ந்து எடுத்த ஒரு புதிய முயற்சி. எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம் என பல பணிகளை நாங்களே மாணவர்களாக செய்து உருவாக்கிய படம் இது. இந்த முயற்சிக்கு துணைநின்ற என் நண்பர்கள், தம்பி, ஆசிரியர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.

Related Stories: