கொலைசேவல் : விமர்சனம்

இறந்துவிட்ட தனது அம்மாவின் நினைவால் கலையரசன் தவிக்கும்போது செல்போனில் அறிமுகமாகும் தீபா பாலு, பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவரை காட்டிலுள்ள தங்கள் குலதெய்வம் கோயிலுக்கு அழைத்து செல்லும் கலையரசன், ஏதோ விபரீதம் நடக்க இருப்பதை உணர்ந்த தீபா பாலுவை தேற்றுகிறார். சாமி கும்பிட்டு முடித்தவுடன் வீடு திரும்ப ஆயத்தமாகும்போது அச்சம்பவம் நடந்து, எல்லாமே தலைகீழாக மாறுகிறது. அது என்ன சம்பவம் என்பது, கல்நெஞ்சையும் கரைய வைக்கிறது.

இயல்பாக நடித்துள்ள கலையரசன், தீபா பாலுவை காதலிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. மிகவும் அழுத்தமான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ள தீபா பாலுவுக்கு விருது கிடைக்கும். வசனங்களின் மூலமே காமெடி செய்துள்ளார், பால சரவணன். கஜராஜ், விஜய் சத்யா, ‘அகரன்’ வெங்கட், ஆதவ் சந்திரா, ‘கயல்’ விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை ஆகியோரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். ஜவ்வாது மலையின் பேரழகை பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கண்முன் கொண்டு வந்துள்ளது. இளையராஜாவா என்று, பின்னணி இசையில் வியக்க வைத்துள்ளார் சாந்தன். ஆணவக்கொலைக்கு எதிரான படங்களில் இதுவும் ஒன்று. வி.ஆர்.துதிவாணன் எழுதி இயக்கியுள்ளார். மேக்கிங் பிரமாதம். கிளைமாக்சை மாற்றி யோசித்திருக்கலாம். வெண்திரையில் கொடூரத்தை காட்டுவதற்கு ஒரு அளவுகோல் வேண்டும்.

Related Stories: