×

போயஸ் கார்டனில் மற்றொரு வீடு: ரூ.31.50 கோடிக்கு வாங்கிய நயன்தாரா

சென்னை: போயஸ் கார்டனில் மற்றொரு வீட்டை ரூ.31 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கியுள்ளார் நயன்தாரா.
நயன்தாரா முன்பு சென்னை எழும்பூரிலுள்ள அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தார். அங்கிருந்து போயஸ் கார்டனில் ரூ.70 கோடியில் பங்களா விலைக்கு வாங்கி தனது கணவர் விக்‌ஷேன் சிவன், மகன்களுடன் தங்கியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அதே போயஸ் கார்டனில் ஒரு அபார்ட்மென்ட்டில் ஒரு குடியிருப்பை ரூ.31.50 கோடிக்கு வாங்கியிருக்கிறார். இந்த வீட்டை தனது அலுவலகமாக பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சினிமா தவிர, பல்வேறு பிசினஸ்களில் நயன்தாரா ஈடுபட்டிருக்கிறார். அதன் மூலம் வரும் வருவாய் மூலம் பல இடங்களில் அவர் சொத்துகளை வாங்கி வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

Tags : Poes Garden ,Nayanthara ,Chennai ,Egmore, Chennai ,Vikshan Sivan ,
× RELATED முஸ்தபா முஸ்தபா விமர்சனம்