டைரக்டர் ஆகிறார் நவ்யா நாயர்

மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர், நவ்யா நாயர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் நடித்த அவர், பல வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இந்நிலையில், ‘பாதி ராத்திரி’ என்ற மலையாள படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் நடிக்க முடிவு செய்துள்ள அவர், விரைவில் ஒரு படம் இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நீண்ட நாட்களாக எனக்கு திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

முன்பு நான் சினிமாவில் பிஸியாக நடித்து வந்தபோது, அந்த எண்ணம் ஈடேறவில்லை. இந்நிலையில், ஒரு படம் இயக்கியே தீரவேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். ஆனால், அந்த எண்ணத்தை நிறைவேற்ற முடியவில்லை. குடும்பம், நடனம், ஸ்கிரிப்ட், படிப்பது என்று பல்வேறு வேலைகள் இருப்பதால், தொடர்ந்து படம் இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட முடியவில்லை. முன்பு ஒரு ஸ்கிரிப்ட் எழுதிவைத்திருந்தேன். அதில் இப்போது சில மாற்றங்கள் செய்தால், இன்னும் அது புதிதாக இருக்கும். ஒரு பெண்ணுக்கு மூன்று உலகங்கள் இருக்கின்றன.

மனதில் ஒரு உலகம், வீட்டில் ஒரு உலகம், சமூகம் என்கிற மூன்றாவது உலகம். இதுதான் படத்தின் மையக்கரு. விரைவில் இப்படத்தை இயக்குவேன் என்று நம்புகிறேன். படம் வெற்றிபெற்றால், தொடர்ந்து படம் இயக்குவேன்’ என்றார்.

Related Stories: