மகனை ஹீரோவாக இயக்கும் தனுஷ்

தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், ஸ்கிரிப்ட் ரைட்டர் என்று பல்வேறு தளங்களில் வெற்றிகரமாக இயங்கி வருபவர், தேசிய விருது பெற்ற தனுஷ். கடந்த ஆண்டு அவர் நடித்த `குபேரா’, `தேரே இஷ்க் மே’ ஆகிய பான் இந்தியா படங்கள் வெற்றிபெற்றன. தனுஷ் இயக்கிய `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் இயக்கி நடித்த `இட்லி கடை’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் `கர’ என்ற படத்தில் நடித்துள்ளார். இது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், விரைவில் மீண்டும் ஒரு படத்தை தனுஷ் இயக்க தயாராகி வருவதாகவும், அதில் அவரது மூத்த மகன் யாத்ரா ஹீரோவாக அறிமுகமாகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனது அக்கா மகன் பவிஷ் நாராயணன் என்பவரை ஹீரோவாக அறிமுகம் செய்து `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கிய தனுஷ், தற்போது தனது மகனை அறிமுகம் செய்து, அப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், கோலிவுட்டில் இச்செய்தி வைரலாகி வருகிறது.

Related Stories: