சினிமாவில் அப்பா இடத்தை ஈடு செய்ய முடியாது: விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் உருக்கம்

சென்னை: யு.அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் படைத் தலைவன். முனிஷ்காந்த், யூகி சேது, கஸ்தூரி ராஜா என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்கலில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். வருகிற மே 23ம் தெதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சண்முக பாண்டியன் பேசியதாவது, “இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். காரணம் அப்பா இருக்கும்போது இந்த படத்தின் கதையைக் கேட்டிருந்தார். இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார்.

‘படை தலைவன்’ படத்தைக் கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான். எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். அவர் இடத்தை பிடிப்பேன் என்றார்கள். ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை, அவர் இடத்தை ஈடு செய்ய முடியாது. இந்த படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன். நிச்சயம் இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும்\” என பேசினார்.

இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குனர்கள் சசிக்குமார், ஏ.ஆர். முருகதாஸ், பொன்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வி.ஜே.கம்பைன்ஸ், தாஸ் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் இப்படத்தை ஜெகநாதன் பரமசிவம் தயாரித்துள்ளார்.

Related Stories: