இந்நிகழ்வில் நடிகை கீதா கைலாசம் பேசியதாவது…
பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு மிகப்பெரிய நன்றி. எமகாதகி மிக முக்கியமான படம், பெப்பினுக்கு என் நன்றி. இந்தக்கதை சொன்னபோதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டயலாக் ஒரு இடத்தில் மட்டுமே இருந்தாலும், படம் முழுக்க எனக்கான இடம் இருந்தது. இந்த கேரக்டரை என்னை நம்பி தந்ததற்கு பெப்பினுக்கு நன்றி. ஒரு கிராமத்தில் கிட்டதட்ட 45 பேரும் ஒன்றாக இருந்தது மிக இனிமையான நினைவுகள், அந்த ஊர் மக்கள் எல்லோரும் நண்பர்களாகிவிட்டனர். 35 நாட்கள் ரூபா டெட்பாடியாக நடித்தார் அவரது அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது. இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது என்னுடைய படம் என்று தான் எனக்கு தோன்றுகிறது. இப்படம் எப்போது ரிலீஸ் என மிகுந்த ஆவலுடன் இருந்தோம். இப்படம் மூலம் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கும். இது பெப்பினின் முதல் படம் போலவே இல்லை, மிக நன்றாக எடுத்துள்ளார். இந்தப்படத்தை மக்களிடம் சேர்த்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
நடிகை ரூபா கொடவாயூர் பேசியதாவது….
பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு மிகப்பெரிய நன்றி. இப்படத்தை எங்கள் குழுவைத் தாண்டி முதல் முதலில் உங்களுக்குத் தான் காட்டினோம், மூன்றாவதாகப் படத்தைப் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஆவலாக இருந்தோம். நீங்கள் கொடுத்த வரவேற்பு மிகப்பெரியதாக இருந்தது. பலர் என்னை அழைத்து இண்டர்வியூ எடுத்தார்கள், நீங்கள் தந்த ஆதரவு அனைத்துக்கும் மிக்க நன்றி. என் முதல் படம் இது, இப்படி ஒரு நல்ல திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. பெப்பின் சார் கதை சொன்ன போது எனக்குப் பல விசயங்கள் புரியவில்லை ஆனால் ஸ்ரீனிவாசராவ் ஜலகம் சார் எனக்குப் புரிய வைத்தார். இதை மிஸ் செய்திருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பேன். பெப்பின் சார் எனக்கு லீலா பாத்திரத்தை தந்ததற்கு மிக்க நன்றி.
ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் சார், பெரிய பெரிய படங்கள் செய்பவர் ஆனால் அவர் அவருக்குப் பிடித்த சின்னப்படங்களும் செய்வது மகிழ்ச்சி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் மிகக் கடினமான உழைப்பைத் தந்தனர். சவுண்ட் மிக அற்புதமாக இருந்தது. சச்சின், அரவிந்த் மேனன் இருவருக்கும் நன்றி. என்னுடன் நடித்த நடிகர்கள் அனைவரும் எனக்குப் பெரிய ஒத்துழைப்பு தந்தார்கள். நரேந்திர பிரசாத்திற்கு நிறையப் பெண் ரசிகைகள் உள்ளனர், அவர் மிக அட்டகாசமாக நடித்துள்ளார். கீதா மேடம் அமரனுக்கு அப்புறம் இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.
எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் பேசியதாவது…
மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பமான புராஜக்ட் இது. இப்படத்தைப் புரிந்து தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பெப்பின் மிகத் திறமையாக இப்படத்தை இயக்கியுள்ளார். ராகுலுக்கு என் நன்றிகள். படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் பேசியதாவது…
எமகாதகி எங்களுக்கு மிகவும் முக்கியமான படைப்பு. இப்படம் முழுமையாக வந்ததற்கு இம்மேடையில் இருப்பவர்கள் தான் காரணம், அதே போல் இப்படம் மக்களிடம் சென்று சேர்ந்ததற்குப் பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் தான் காரணம். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். ராகுல் மற்றும் ஸ்ரீனிவாசராவ் சார் இருவரிடமும் இந்த கதையை ஒரு ஐடியாவாக தான் சொன்னேன், அவர்கள் உடனே இதை டெவலப் செய்யுங்கள் கண்டிப்பாகச் செய்யலாம் என்றனர், பின் ஒளிப்பதிவாளர் சுஜித்திடம் இதே கதையைச் சொன்ன போது, அவரும் ஊக்கம் தந்தார். இப்படித்தான் இந்த திரைப்படம் ஆரம்பமானது. சுஜித் நட்பு ரீதியாக மிக நெருங்கிய பழக்கம், அவர் பெரிய பட்ஜெட் படங்கள் செய்து தன்னை நிரூபித்து விட்டார், எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால் மிகவும் ஊக்கம் தந்தார், இப்போது வரை அவர் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. பல காட்சிகளை எப்படி எடுக்கப் போகிறேன் எனப் பயந்தேன். சுஜித் அதை மிகச்சுலபமாகச் சாதித்து விட்டார். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள், 36 குடும்பங்களாகப் பிரித்து வைத்துத் தான் வேலை பார்த்தோம் அனைவரும் மிகப்பெரும் ஒத்துழைப்புத் தந்தனர். எடிட்டிங்கில் ஸ்ரீஜித் சாரங் பல ஆச்சரியங்களைச் செய்து காட்டினார்.
நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிட்டுள்ளது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். “எமகாதகி” கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தில் அமரன் புகழ் நடிகை கீதா கைலாசம் மற்றும் பிளாக்ஷீப் புகழ் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாக வைத்துக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். துருவங்கள் பதினாறு, டியர் காம்ரேட், முதல் நீ முடிவும் நீ, கணம், படப்புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார், அனிமல், அமரன், லியோ போன்ற பல படங்களின் சவுண்ட் டிசைனிங் நிறுவனமான Sync Cinema, ஒலி வடிவமைப்பைச் செய்துள்ளது. உயர்தர தொழில்நுட்ப தரத்தில், மிகச்சிறப்பான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. மார்ச் 7 ஆம் தேதி வெளியான “எமகாதகி” திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.