×
Saravana Stores

கிரைம் திரில்லராக இரவினில் ஆட்டம் பார்

சென்னை, அக்.23: ‘இரவினில் ஆட்டம் பார்’ என்கிற பெயரில் ஒரு முழு நீள கிரைம் த்ரில்லர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. பள்ளி மாணவிகளுக்கு எதிராகப் பாலியல் குற்றம் செய்பவர்களையும், பள்ளி மாணவர்களைப் போதை மருந்துக்கு அடிமையாக்கும் நாசக்காரக் கும்பலையும் எதிர்த்து ஒரு நிழல் கதாநாயகன் இரவினில் ஆடும் ஆட்டம் தான் இந்தப் படம். ஆர்எஸ்வி மூவிஸ் சார்பில் சேலம் ஆர். சேகர் தயாரித்துள்ளார். எழுதி இயக்கியுள்ளார் ஏ.தமிழ்ச்செல்வன்.

இப்படத்தின் கதை நாயகனாக உதயா என்கிற உதயகுமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகனாக மாரா ராஜேந்திரன் நடித்துள்ளார். நாயகியாக கிரேசி. இவர் சன் டிவியில் வரும் ‘மல்லி’, ‘திருமகள்’ தொடர்களில் நாயகியாக நடித்து வருபவர். இவர்கள் தவிர பருத்தி வீரன் சரவணன், அஸ்மிதா, ஈஸ்வரன், அடையாளம் பாண்டு, சி.எம். துரை ஆனந்த் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஜினோபாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். நல்லதம்பி இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பு எஸ் ஆர் முத்து கொடாப்பா.

Tags : Chennai ,
× RELATED சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி