பாலியல் புகார் எதிரொலி; ஜானி மாஸ்டரை விசாரிக்க பிலிம் சேம்பரில் குழு: படங்களில் பணியாற்ற தடை

ஐதராபாத்: ஜானி மாஸ்டர் மீதான புகாரை விசாரிக்க ெதலுங்கு பிலிம்சேம்பர் குழு ஒன்றை அமைத்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர் ஜானி. இவரது குழுவில் உள்ள 21 வயது பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை மானபங்கம் செய்தார் என புகார் கூறினார். இந்த புகாரின் பேரில் ஜானி மாஸ்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தெலுங்கு பிலிம் சேம்பரும் குழு ஒன்றை அமைத்து இது தொடர்பாக நேற்று விசாரணையை துவக்கியுள்ளது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோல் ஜானி மாஸ்டர் மீது புகார் கூறப்பட்டது. அவர் கைதும் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் புகார் எழுந்துள்ளது. புகார் கூறிய அந்த பெண், 2019ம் ஆண்டிலேயே ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. மைனர் பெண்ணை எப்படி பணியில் அமர்த்தப்பட்டார் என்ற ரீதியிலும் விசாரணை நடப்பதாக பிலிம்சேம்பர் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே தெலுங்கு படங்களில் பணியாற்ற ஜானி மாஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பாலியல் புகார் எதிரொலி; ஜானி மாஸ்டரை விசாரிக்க பிலிம் சேம்பரில் குழு: படங்களில் பணியாற்ற தடை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: