கடன் தீர்க்கும் மடப்புரம் விலக்கு தெற்குமுக விசாலாட்சி விநாயகர்

கடன் தீர்க்கும் மடப்புரம் விலக்கு தெற்குமுக விசாலாட்சி விநாயகர் ஆலயம் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலம் அடுத்த ஆர்ச் எதிரில் விசாலாட்சி ஜோதிட மந்திராலயத்தில் அமைந்து உள்ளது. இந்த தெற்கு முக விநாயகர் ஆலயத்தில் தினசரி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் வருகை தருகின்றனர்.

வலம்புரி விநாயகருக்கு பக்தர்கள் 7 தேங்காய் மாலை சாற்றி, 7 லட்டு, 7 எலுமிச்சை பழம் வைத்து 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லை தீர்ந்து, திருமணத் தடை அகன்று முன்னோர் சாபமும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோயில் தரிசன தொடர்புக்கு கைப்பேசி எண்: 94431 65504.

Related Stories: