இதனைத்தொடர்ந்து அங்குள்ளவர்கள் கூச்சல் போடவே யானை அருகில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தேயிலைத்தோட்டம் வழியாக சென்றுள்ளது. தகவல் அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள், யானைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்ககோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், பொதுமக்களை சமாதானப்படுத்தி வனப்பணியாளர்களை அப்பகுதியில் அதிகப்படுத்தி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பாடந்துறை சுற்றுவட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் நடமாட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருவதால், யானைகள் ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கவும், ஊருக்குள் சுற்றித்திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஆட்டோவை விரட்டி தள்ளிய யானை appeared first on Dinakaran.
