சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

சங்ககிரி, ஜூலை 30: சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகாவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அருள்பிரகாஷ் (27). இவர் 17 வயது சிறுமியை, கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் இருவீட்டு பெற்றோர்களுக்கும் தெரிய வந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அருள்பிரகாஷ் கடந்த மே 18ம்தேதி பெற்றோர்களுக்கு தெரியாமல் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்திச் சென்று கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டு பெற்றோர்களும் ஏற்றுக் கொள்ளாததால், அதே பகுதியில் அருள்பிரகாஷ் சிறுமியுடன் தனிக் குடித்தனம் நடத்தி வந்தார். இதுகுறித்து சேலம் சைல்டு லைனுக்கு தகவல் தெரிய வந்தது. இதையடுத்து, கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மேகனா விசாரித்ததில், குழந்தை திருமணம் செய்தது உறுதியானது. இதுகுறித்து அவர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகாரளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி, சிறப்பு எஸ்.எஸ்.ஐ. கலையரசி ஆகியோர் சிறுமியை குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக அருள்பிரகாஷ் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: