இதையடுத்து திறப்பு விழா நடத்தப்பட்டு, பட்டாபிராம் மாடர்ன் சிட்டி பகுதியில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சார்பதிவாளர் அலுவலகம் அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. நேற்று பத்திரப்பதிவு தொடங்கியது. பத்திரப்பதிவு தொடங்கிய முதல் நாளே ஆடிப்பூரம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தனர்.
ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் சராசரியாக 100 பத்திரப்பதிவுகள் நடைபெறுகின்றன. முகூர்த்த நாட்களில் 200 பத்திரப்பதிவுகள் வரை நடக்கிறது. இவ்வளவு பத்திரப்பதிவு நடைபெறும் சார்பதிவாளர் அலுவலகத்தில் குடிநீர், கழிவறை, இருக்கை, வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை வசதி இல்லை; மேலும் வெயில், மழை காலங்களில் நிற்பதற்குகூட இடமே இல்லாமல் அவதிப்படும் சூழல் உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, அடிப்படை வசதிகள், வாகன நிறுத்தம் போன்றவற்றை விரைவாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post ஆவடி புதிய சார் பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
