தர்மபுரி, ஜூலை 28: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 31ம் தேதி(வியாழக்கிழமை) முற்பகல் 11 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. கலெக்டர் சதீஸ் தலைமை வகித்து விவசாயிகளிடையே குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்கிறார். எனவே, கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கருத்துகளையும் எடுத்துக்கூறி பயனடையுமாறு கலெக்டர் சதீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
The post விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.
