விழுப்புரம் பெட்ரோல் பங்க்கில் ரூ.6.50 லட்சம் கையாடல்: ஊழியருக்கு போலீஸ் வலை

 

விழுப்புரம், ஜூலை 26: விழுப்புரம் பெட்ரோல் பங்க்கில் ரூ.6.50 லட்சத்தை கையாடல் செய்த ஊழியரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இதில் மேல்தெருவை சேர்ந்த முகமதுநிசான்(38) என்பவர் கடந்த 6 மாதமாக பெட்ரோல்போடும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அவர் பணியிலிருந்த போது ஜிபே மூலம் ரூ.6,50,000 பணத்தை கையாடல் செய்துள்ளார். இதுகுறித்த பெட்ரோல் பங்க் மேலாளர் சண்முகம் அளித்தபுகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

The post விழுப்புரம் பெட்ரோல் பங்க்கில் ரூ.6.50 லட்சம் கையாடல்: ஊழியருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: