வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலையில் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து, வட மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மதியம் மேற்கு வங்க கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் -வங்க தேச கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

மேலும், மகாராஷ்டிரா-கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக் கடல் பகுதிகளிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.

அத்துடன் தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். அதன் காரணமாக மேற்கண்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநிலை நாளை முதல் 30ம் தேதி வரையும் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நேற்று போல இன்றும் மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

The post வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் appeared first on Dinakaran.

Related Stories: