டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் விவகாரம் வழக்கு பதிவு செய்யக்கோரி மனு: லஞ்ச ஒழிப்பு துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 2021-23ம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய 1,068 கோடியே மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர்கள் அணி துணைச் செயலாளர் இ.சரவணன், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளார்.

புகார் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரியும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.  அறப்போர் இயக்கம் சார்பிலும் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

The post டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் விவகாரம் வழக்கு பதிவு செய்யக்கோரி மனு: லஞ்ச ஒழிப்பு துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: