டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

ஒட்டன்சத்திரம், ஜூலை 26: ஒட்டன்சத்திரம் அருகே விரலப்பட்டி பிரிவு ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (18), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் டூவீலரில் ஒட்டன்சத்திரத்திற்கு வந்து கொண்டிருந்தார். சத்திரப்பட்டி-கோபாலபுரம் அருகே வந்த போது எதிரே வந்த டூவீலர் மணிகண்டனின் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த சத்திரப்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: