வாஷிங்டன்: கடந்த ஏப்ரல் மாதம் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா பரஸ்பரமாக வரிகளை விதித்தன. இதில் சீனா மீது அதிகளவு வரி போடப்பட்டது. அமெரிக்க பொருட்களின் மீதான வரியை சீனா 125% என உயர்த்தியது. பதிலுக்கு சீன பொருட்களின் மீதான வரியை அதிரடியாக 145% ஆக அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டது. ஜெனிவாவிலும்,லண்டனிலும் 2 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்ததையடுத்து வர்த்தக பதற்றம் தணிந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படலாம் என தெரிகிறது. இந்த நிலையில் டிரம்ப் அளித்த பேட்டியில், நான் சீனா செல்வது வெகு தொலைவில் இல்லை’’ என்றார்.
The post விரைவில் சீனா செல்வேன்: டிரம்ப் தகவல் appeared first on Dinakaran.
