சென்னை: சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான குறைதீர் முகாம், வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வாரம்தோறும் செவ்வாய் கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த குறைதீர் முகாமில், சென்னை பெருநகர காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை, சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் போலீசார் வரை கலந்து கொண்டனர்.
இந்த குறைதீர் முகாமில் போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு 3 உதவி கமிஷனர்கள், 5 இன்ஸ்பெக்டர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், 1 அமைச்சுப்பணியாளர், 57 காவலர்கள் என மொத்தம் 74 பேரிடம் நேரடியாக மனுக்கள் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், சென்னை காவல்துறை தலைமையிட கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி, நலன் மற்றும் எஸ்டேட் துணை கமிஷனர் ஹரிகிரான் பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post காவலர்களுக்கான குறைதீர் முகாம் உதவி கமிஷனர் உள்பட 74 பேரிடம் கமிஷனர் அருண் மனுக்கள் பெற்றார் appeared first on Dinakaran.
