இது தொடர்பாக அப்போதைய காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 2 எதிரிகள் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அதனை தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்தது.
விசாரணையின் போது குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்கள். கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை XI வது நீதிமன்றம் எதிரிகள் இருவருக்கும் பிடியாணை பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின்படி, மத்தியகுற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் A.ராதிகா, வழிகாட்டுதலின் பேரில் சைபர் கிரைம் காவல் குழுவினர் 1 வருடகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை எதிரிகளின் பூர்வீகமான தஞ்சை மாவட்டம், வீரியன்கோட்டை, பேராவூரணி, சொரியன் தெருவில் வைத்து, தலைமறைவாக வசித்து வந்த A1-ராஜா வ/55 மற்றும் A3-விஜயலட்சுமி, பெ/52 ஆகிய குற்றவாளிகளை கண்டுபிடித்து நேற்று (21.07.2025) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post 2005ம் ஆண்டு சைபர் கிரைம் வழக்கில் தலைமறைவு குற்றவாளிகள் இருவர் கைது: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை appeared first on Dinakaran.
