வேள்விமங்கலம் கிராமத்தில் மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேர் கைது

குன்னம், ஜூலை 22: மாட்டுவண்டியில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி குன்னம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வேல்விமங்களம் அம்பேத்கர் தெரு அருகே இரண்டு மாட்டு வண்டியில் மணல் திருடிக்கொண்டு வந்த 2 பேரில் ஒருவரை பிடித்தனர். விசாரணையில் அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூரை சேர்ந்தவர்கள் சக்திசெல்வம் (36), கொளஞ்சி (55) ஆகிய 2 பேரும் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுப்பட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 1/2 யுனிட் மணல் மற்றும் இரண்டு மாட்டுவண்டியையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்துவிசாரிக்கின்றனர்.

The post வேள்விமங்கலம் கிராமத்தில் மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: