புகையிலை பதுக்கிய 2 பேர் கைது

 

போடி, ஜூலை 22: போடி நகர் காவல் நிலைய எஸ்.ஐ கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போடி மதுரைவீரன் வடக்கு தெருவை சேர்ந்த முத்து(37) என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துவை கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போடி தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ விஜய் மற்றும் போலீசார் மீனாட்சிபுரம் பேரூராட்சி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பேரூராட்சி அலுவலகம் பகுதியில் முகமது ரபிக் (60) என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் புகையிலைப் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து 91 புகையிலை மற்றும் கூல் லிப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் முகமது ரபிக்கை கைது செய்தனர்.

The post புகையிலை பதுக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: