ஈரோடு, ஜூலை 22: ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களாக அரசு பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் நடந்து வந்தது.
இதில், முதுகலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். நேற்று கணித பிரிவு பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 24 பேர் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். நேற்றுடன் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நிறைவு பெற்றது. இருப்பினும், தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஈரோடு பசெ பார்க் பகுதியில் உள்ள சமக்ர சிக்ஷா அலுவலகத்தில் இன்று (22ம் தேதி) பிஆர்டிஇ எனப்படும் ஆசிரியர் பயிற்றுனர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்டத்துக்குள்ளான பணியிட மாறுதல் கலந்தாய்வும், நாளை (23ம் தேதி) மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு நடக்கிறது என பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
The post பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நிறைவு appeared first on Dinakaran.

