அண்ணாநகர், ஜூலை 22: கோயம்பேடு மண்ணடி தெருவில், வாடகை வீட்டில் தனியாக வசித்தவர் தனலட்சுமி (50). பாரிமுனை பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது வீட்டில் நிர்வாண கோலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அதில், தனலட்சுமி மது பழக்கத்துக்கு அடிமையானதும், இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவரும் எங்கு உள்ளார் என்பதும் தெரியவில்லை என்பதும் தெரிந்தது. இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் தனலட்சுமிக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.
அவரது உடலை வாங்க உறவினர்கள் யாரும் வராததால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 22 நாட்களுக்குள் உறவினர்கள் வந்து உடலை பெறாவிட்டால், அவரது உடலை போலீசாரே அடக்கம் செய்துவிடுவார்கள், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பெண் மர்ம மரணத்தில் திருப்பம் ரத்த அழுத்தத்தால் இறந்தது தெரிந்தது appeared first on Dinakaran.
