அனுமதியின்றி மண் எடுத்த லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஜூலை 21: கந்திகுப்பம் அருகே உளள பாலிநாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் முத்தம்மாள் மற்றும் அலுவலர்கள், கந்திகுப்பம் தனியார் கல்லூரி அருகில், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்தபோது அதில் 2 யூனிட் மண் இருந்ததும், அந்த மண் ராசிப்பள்ளி ஏரியில் இருந்து கந்திகுப்பத்திற்கு அனுமதியின்றி எடுத்து செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இது தொடர்பாக விஏஓ முத்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post அனுமதியின்றி மண் எடுத்த லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: