பந்தலூர், ஜூலை 21: பந்தலூர் அருகே சேரங்கோடு படச்சேரி பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு படச்சேரி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் புகுந்து குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தியது.
மேலும், பாக்கு, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களையும் உடைத்து சேதப்படுத்தியது. மக்கள் தகரங்களை தட்டியும், சத்தமிட்டும் யானைகளை விரட்டினர். யானைகள் சிரிது நேரம் அப்பகுதியில் முகாமிட்டு அதன்பின் அங்கிருந்து நகர்ந்து சென்றது. காட்டு யானைகள் நடமாட்டத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
The post படச்சேரி பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.
