கோவை சிங்காநல்லூரில் சிறுவர்கள் கற்கள் வீசியதை கண்டித்த முதியவர் மீது தாக்குதல்

 

கோவை,ஜூலை21: கோவை சிங்காநல்லூரில் சிறுவர்கள் கற்கள் வீசியதை கண்டித்த முதியவரை தாக்கிய பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் உப்பிலிப்பாளையம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் கிட்டான் (85). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார்.அப்போது அங்கு விளையாடி கொண்டு இருந்த 4 சிறுவர்கள் கற்களை எடுத்து கிட்டான் மீது வீசி கொண்டு இருந்தனர்.

இதனால் அவர் அந்த சிறுவர்களை கண்டித்து அங்கிருந்து செல்லும்படி தெரிவித்தார்.உடனே அந்த சிறுவர்கள் அங்கிருந்து சென்று தங்களது வீட்டில் பெற்றோரிடம் கூறினர். சிறுவர்களின் பெற்றோர்கள் ராமகிருஷ்ணன், மோகன், ராதாமணி, லட்சுமி ஆகியோர் கிட்டான் வீட்டிற்கு வந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

மேலும், தகாத வார்த்தைகளால் திட்டி கிட்டானை தாக்கினர். பலத்த காயம் அடைந்த கிட்டான் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ராமகிருஷ்ணன், மோகன், ராதாமணி, லட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவை சிங்காநல்லூரில் சிறுவர்கள் கற்கள் வீசியதை கண்டித்த முதியவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: