- காஞ்சிபுரம்
- TNPSC
- காஞ்சிபுரம் மாவட்டம்
- கலெக்டர்
- கலாச்செல்வி மோகன்
- காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம்
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கி நடக்கவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது, குரூப்-2 பதவிகளில் வரும் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-மிமி உள்ளிட்ட 50 காலிப்பணியிடங்களுக்கும், தொகுதி-2ஏ பதவிகளில் வரும் முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கும் என மொத்தம் 595 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-2 (தொகுதி-2 மற்றும் 2ஏ பணிகள்) அறிவிப்பானது 15.7.2025 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் 21.7.2025 முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொள்ளவும், மேலும் விவரங்களுக்கு 044-2723 7124 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் appeared first on Dinakaran.
