பிளஸ் 1 மாணவி மாயம்

ஊத்தங்கரை, ஜூலை 20: ஊத்தங்கரை அடுத்த மாரம்பட்டியை சேர்ந்தவரின் 16 வயது மகள், அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். மகள் சரியாக படிக்காததால், வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக டிசி வாங்குவதற்காக மகளுடன் பெற்றோர் பள்ளிக்கு சென்றிருந்தனர். அப்போது மாணவி தனது தோழிகளிடம் பேசி விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி பெற்றோர் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிளஸ் 1 மாணவி மாயம் appeared first on Dinakaran.

Related Stories: