தேன்கனிக்கோட்டை, ஜூலை 20: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மதகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(27). இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கவுதமி(20) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரமேஷிற்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ரமேஷின் பெற்றோர், அவரை கண்டித்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 15ம் தேதி, நண்பரின் திருமணத்திற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ரமேஷ், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி கவுதமி, தளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது கணவர் ரமேஷ், அவரது கள்ளக்காதலியுடன் சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும், கணவரை மீட்டு தரவேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கள்ளக்காதலியுடன் வாலிபர் ஓட்டம் appeared first on Dinakaran.
