வேலூர், ஜூலை 20: வேலூர் அருகே நீர்வீழ்ச்சி பகுதியில் டிரைவரை குத்தி கொலை செய்து சடலத்தை வீசிவிட்டு சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகினறனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் அருகே அரியூர் அடுத்த புலிமேடு வனப்பகுதியில் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த பகுதியில் மழைகாலங்களில் தண்ணீர் கொட்டும். இங்கு குளிக்க சுற்றிப்புற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று சிலர் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது நீர்வீழ்ச்சி அருகே வாலிபர் சடலமாக கிடந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை தொடங்கினர். விசாரணையில், சடலமாக இருந்தது வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் ஸ்ரீநாத் (28) என்றும், இளைஞரின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில் சடலமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை கைபற்றி உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் தடவியல் நிபுணர்களை கொண்டு தடயங்களை போலீசார் சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட நாத் டிரைவாக பணியாற்றி வந்துளளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் வெளியூர் சுற்றுலா செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் பெற்றோர் போன் செய்து உள்ளனர். ஆனால் போன் சுட்சு ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் அவர்களது பெற்றோரும் சுற்றுலா சென்று உள்ளதால் போனில் சார்ஜர் இல்லாமல் இருந்து இருக்கலாம் என்று எண்ணி யாரிடமும் கேட்கவில்லையாம். போலீசில் புகார் அளிக்கவில்லையாம். சடலம் நீர்வீழ்ச்சியில் இருப்பது குறித்து விஏஓ தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நாங்கள் சென்று விசாரணை நடத்தினோம். நீர்வீழ்ச்சி மேல் பகுதியில் மது குடித்துள்ளனர். பின்னர் நாத்தை கழுத்து உள்ளிட்ட 6 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் நீர்வீழ்ச்சி மேல் பகுதியில் இருந்து தண்ணீர் வெளியே செல்லும் நீர் செல்லும் பகுதியில் சடலத்தை வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த கொலையில் ஒருவர் மட்டும் ஈடுபட்டாரா? அல்லது கும்பலாக செயல்பட்டார்களா? தெரியவில்லை. முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரமா? அல்லது முன்விரோத தகராறு காரணமாக இந்த கொலை நடந்தா? என்பது குறித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒருவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றோம்’ என்றனர்.
The post நீர்வீழ்ச்சியில் டிரைவர் குத்தி கொலை செய்து சடலம் வீச்சு சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரணை வேலூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.
