ரத்தம், கண் தானம் முகாம்

 

காஞ்சிபுரம், ஜூலை 19: காஞ்சிபுரத்தில் சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி ரத்த தானம், கண் தானம் முகாம்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், கூட்டுறவுத்துறை மூலம் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில், கூட்டுறவுத்துறை மற்றும் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து, ரத்த தான முகாம் நடத்தியது.

இதில், காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ பங்கேற்று, ரத்த தானம் முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, 26 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். அதேபோல், கூட்டுறவுத்துறை மற்றும் அரசு பொது மருத்துவமனை சார்பில் கண் தான முகாம் நடத்தியது.

கூட்டுறவுத்துறை அலுவலர்கள், சங்கப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று, கண் தானம் செய்ய முன்பதிவு செய்தனர். இம்முகாமில் கண் தானம் முன்பதிவு செய்யபட்ட 45 பணியாளர்கள் உள்பட பலருக்கு, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் சான்றிதழ் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, நேற்று தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் சந்திப்பு முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம், மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.1 கோடி 26 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடந்தது.

இதில், காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ பங்கேற்று, மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.1 கோடி 26 லட்சம் கடனுதவிகளை வழங்கினார். பின்னர் கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும் தமிழ்நாடு நாளை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இறுதியில், பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவர்கள் மூலம், தமிழ்நாடு வடிவில் ட்ரோன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ரத்தம், கண் தானம் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: