அரியலூர், ஜூலை 19: அரியலூர் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மகிளா விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த தளவாய் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தியூர் கிராமத்தை சேர்ந்த வீராச்சாமி மகன் நாராயணசாமி (37). இவர், 14 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி கடந்த 29.9.2023 அன்று தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் தளவாய் காவல்நிலையத்தில் 29.9.2023 அன்றே நாராயணசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த வழக்கு அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை அனைத்தையும் கேட்டு, மற்றும் பார்த்து அறிந்த நீதிபதி மணிமேகலை, குற்றம்சாட்டப்பட்ட நாராயணசாமிக்கு 5 சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.
