தா.பழூர் பகுதியில் கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு

தா.பழூர், ஜூலை 19: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சுந்தரேசபுரம், கோவிந்தபுத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிகடைகளில் தா.பழூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள் தலைமையில், சுகாதார ஆய்வாளர் அஜித் ,ராம் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது பொது இடங்களில் புகைப்பிடித்த குற்றத்திற்காக நான்கு நபர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலைப் பொருட்கள் விற்ற கடை உரிமையாளர்களுக்கு இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுகிறதா என சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

The post தா.பழூர் பகுதியில் கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: